9 பிப்ரவரி, 2011

கிழக்கு பாடசாலைகள் நாளை முதல் வழமைக்கு






கிழக்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மூன்று தினங்கள் மூடப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை (10) வியாழக்கிழமை முதல் வழமை போல் இயங்கும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.. நிஸாம் தெரிவித்தார். மாகாணத்தில் 50 வீதமான பாடசாலைகள் வெள்ளத்தால் இயங்க முடியாத நிலை நிலவியது.

மழைக்கால நிலை தொடருகிறது, இந்நிலையில் தொடர்ந்து பாடசாலைகளை மூடுவதென்பது மாணவரின் கல்வியைப் பாதிக்கும் என்று கூறிய அவர் பாடசாலைகளை நாளை மீண்டும் திறக்க ஏற்பாடாகியுள்ளது என்றார்.

கடந்த மூன்று தினங்களும்மகாஓயா, தெஹியத்தக்கண்டிய ஆகிய வலயங்கள் தவிர்ந்த ஏனைய 14 கல்வி வலயங்கள் மூடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் (செவ்வாய்) அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை வலயப் பாடசாலைகள் மீண்டும் நேற்றிலிருந்து இயங்க ஆரம்பித்துள்ளன.

நாளை இயங்க முடியாத பாடசாலைகள் இருப்பின் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அது பற்றித் தீர்மானிக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக