9 பிப்ரவரி, 2011

காலி - மாத்தறை அதிவேக ரயில் சேவை திங்களன்று ஆரம்பம்






காலி- மாத்தறைக்கு இடையிலான அதிவேக ரயில் சேவை எதிர்வரும் திங்களன்று (14) வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்றுத் தெரிவித்தது.

இந்திய கடனுதவியுடன் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் காலி- மாத்தறை இடையிலான ரயில் பாதை மீளமைக்கப்பட்டுள்ளது.

அதிவேக ரயில்சேவை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் மாத்தறை ரயில் நிலையத்தில் நடைபெறும். விழாவில் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளும் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, பிரதி அமைச்சர் ரோஹண திசாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா மற்றும் அதிதிகள் 14ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காலியில் இருந்து மாத்தறைக்கு ரயிலில் பயணம் செய்ய உள்ளதாக ரயில்வே திட்ட அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். 15-20 நிமி டங்களில் காலியில் இருந்து மாத்தறைக்கு பயணம் செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக