9 பிப்ரவரி, 2011

ஈரானில் தூக்கிலிடப்பட்ட நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்

ஈரானில் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படும் நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவரது பூதவுடல் வட மத்திய நகரான செம்னானில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புதைக்கப்பட்டதாகவும் அவ்வமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

சஹாரா பஹராமி(45) என்ற பெண்மணி போதைப் பொருள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இவரது கைதானது அந்நாட்டு ஜனாதிபதி அஹமட் நிஜாட்டிற்கு எதிரான போராட்டத்தினை அடுத்தே இடம்பெற்றமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவமானது நெதர்லாந்து மற்றும் ஈரானின் இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக