11 பிப்ரவரி, 2011

சயரோக ஒழிப்பு : உடனடி கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பு



இலங்கையில் இருந்து சயரோகத்தை முற்றாக ஒழிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சயரோகம் பற்றிய உடனடிக் கண்காணிப்பு நிலையங்கள் நேற்று (10) முதல் தனியார் மருத்துவமனைகளில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகிறார்.

ஆண்டுதோறும் புதிதாக பத்தாயிரம் சயரோக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் அரச மருத்துவமனைகளில் மாத்திரம் சயரோக உடனடிக் கண்காணிப்பு நிலையங்களை நடத்தி வருவதன் மூலம் இந்த நிலையினைக் கட்டுப்படுத்த முடியாதெனவும் அதனால் அரசாங்கம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்படும் முதலாவது உடனடி கண்காணிப்பு நிலையம்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஆசிறி மருத்துவமனையில் நேற்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏனைய தனியார் மருத்துவமனைகளுக்கும் விஸ்தரிக்க உள்ளதாகக் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு சயரோகத்தை பரப்பும் நிலையமாக கொழும்பு நகரம் விளங்குவதாகவும், நாளாந்தம் கொழும்பு நகரிற்கு வருகின்ற சுமார் பத்து இலட்சம் வெளி மக்கள் மீண்டும் வீடு திரும்பும் போது சயரோகக் கிருமிகளையும் எடுத்துச் செல்வதாகவும் மேலும் கூறினார்.

சயரோக நோயாளர்களுக்கு உடனடி கண்காணிப்புப் திட்டத்தின் ஊடாக சிகிச்சையளிக்கும் அரசாங்க வேலைத் திட்டத்திற்கு பொதுமக்கள் காட்டி வரும் ஆர்வம் குறைந்து வருகின்றமையால் அரசாங்கம் இந்த முடிவிற்கு வந்ததாக அமைச்சர் விளக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக