10 பிப்ரவரி, 2011

விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது



விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக