11 பிப்ரவரி, 2011

25,000 மெட்ரிக் தொன் அரிசியை உடன் சந்தைப்படுத்த உத்தரவு






கையிருப்பில் உள்ள அரிசித் தொகையில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன்னை உடனடியாக சந்தைப் படுத்துமாறு நுகர்வோர் வர்த்தக விவகார அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவருக்கு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

அரிசித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கூ.மொ.வி. தலைவர் நிராஜ் பெர்னாண்டோவுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, அரிசியையோ, நெல்லையோ எவராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென் றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அதே நேரம் அரிசியைக் கூடுதல் விலைக்கு விற்பவர்களுக்கு எதி ராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்ரன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது சுமார் நூறு வர்த்தகர்கள் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள நிர்ணய விலையை விடவும் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாதென அரசாங்கம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

அதன்படி சம்பா கிலோ ஒன்று 70 ரூபா வாகவும், பச்சை அரிசி, நாட்டரிசி, வெள்ளை அரிசி ஆகியன கிலோ ஒன்று 60 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாதென்றும் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், மேலதிகமாக சந்தையில் அரிசியை விற்பனைக்கு பெற்றுக்கொடுப்ப தாகவும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக