11 பிப்ரவரி, 2011

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது





இலங்கைத் தமிழர்கள் உட்பட சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 101 பேருடன் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இரு படகுகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் வைத்து அந்நாட்டின் கடற்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் அதில் பயணித்தவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலிய கடற்படையினருக்கு சொந்தமான கிமாஸ் மைற்லன்ட் என்ற கப்பலே இரு படகுகளையும் கண்டுபிடித்துள்ளது. 97 பயிணகளுடன் 6 சிப்பந்திகளும் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு படகில் 53 பயணிகளும் 2 சிப்பந்திகளும் மற்றைய படகில் 48 பயணிகளும் 4 சிப்பந்திகளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்த சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளில் இலங்கையர் பலரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக