11 பிப்ரவரி, 2011

வெள்ளரச மரக்கன்றினை வவுனியா மக்கள் தரிசிப்பு



அரசமரம் கன்று

அநுராதபுரம் ஸ்ரீமகா போதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிற்கும் எடுத்து செல்லப்பட்ட வெள்ளரச மரக்கன்று மக்களுடைய தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

வவுனியாவிற்கு நேற்று முன்தினம் (புதன்) மாலை கொண்டுவரப்பட்ட இந்த மரக்கன்று மணிக்கூட்டு சந்தியிலிருந்து கண்டி வீதி போதி தக்ஸினா ராமயவிற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் கண்டிய நடனம் மற்றும் தமிழ் கலாசார நாதஸ்வரம், காவடி ஆட்டம், சிறுமிகளுடைய கோலாட்டம் ஆகியன இடம் பெற்றது.

பெளத்த கொடி ஊர்வலமும் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர், பாதுகாப்பு படை தளபதிகள், மாவட்ட அரச அதிபர், நகர பிதா, உள்ளிட்ட பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வணக்கத்திற்குரிய சீயம்பலகஸ்வவ விமலசாரதேரே தலைமையில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற பெளத்த தலமான புத்தகாயாவில் இந்த வெள்ளரசு மரம் 17 ஆம் திகதி நாட்டப்படவுள்ளது.

நேற்று காலை வவுனியாவிலிருந்து வெள்ளரசு மரக்கன்று தாங்கிய ஊர்வலம் தம்புள்ளைக்கு புறப்பட்டது. கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய இடங்களில் மக்களுடைய தரிசனத்தின் பின்னர் எதிர்வரும் திங்கள் மாலை அலரிமாளிகையை சென்றடையுமென விமலசார தேரர் குறிப்பிட்டார்.

16 ஆம் திகதி இந்தியாவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் போயா தினத்தன்று புத்தகாயாவில் சமய வைபவத்துடன் வெள்ளரச மரம் நடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக