11 பிப்ரவரி, 2011

புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது


வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர். பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும் இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுக்ஷீமன இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு பணத்தினை வழங்காவிடில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கப்படும் என்றும் இவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக கைது செய்வதற்கு பம்பலப்பிட்டி பொலிஸக்ஷிர் திட்டமிட்டனர். செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை குறித்த வர்த்தகர் மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மொகமட் சலாகுதீன் மொகமட் அஸ்லம் மற்றும் இந்தியப் பிரஜையான நூர் அமித் முகமட் அஸ்ரப் ஆகிய இருவருமே பொலிஸரால் கைதுசெய்யப் பட்டவர்களாவர். இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரி நின்றனர்.

இதனையடுத்து இதற்கான அனுமதியினை வழங்கிய பிரதான நீதிவான் விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக