11 பிப்ரவரி, 2011

அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப் பகிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.

1995ம் ஆண்டின் பின் நியமனம் பெற்ற வங்கி ஊழியர்களது ஓய்வூதியம் தொடர்பாகப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவை தொடர்பாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் பயனளிக்க வில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இன்று பி.ப. 12.30. முதல் அரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக