6 செப்டம்பர், 2010

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை: பயிற்சி நிலையம் ஆரம்பம் 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானை யிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாத காலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உணவு, தங்குமிட வசதிகளுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளுக்கமைய இந்த தொழில் வாய்ப்பை வழங்க மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்படவுள்ள துடன் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்திற்கு 50 தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் ஓரிரு தினங்களில் கலந்து ஆலோசித்து இவ்வார இறுதிக்குள் உரிய தீர்வை காணவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஏனையோ ருக்கு கிளிநொச்சியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தொழிற் பயிற்சி வழங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கும் மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக