6 செப்டம்பர், 2010

தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. சிறைக்கைதிகள் கொடிதினத்தையொட்டிய முதலாவது கொடி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து சிரைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டாரவினால் அணிவிக்கப்பட்டது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற வைபவத்தில் கண்பார்வை குறைந்த கைதிகளுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. சிறைக்கைதிகள் நலன்புரி சங்க தலைவர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வைபவத்தில் பங்கெடுத்தனர்.

தொடர்ந்து 7 நாட்களுக்கு வைபவங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்ததார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக