17 மே, 2010

:​ இலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை குறைக்க முடி​யாது



இலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை குறைக்க முடி​யாது என்று பாது​காப்​புத் துறை செய​லர் கோத்​த​பய ராஜ​பட்ச மறுத்து விட்​டார்.​

முன்​ன​தாக இலங்​கை​யில் போர் நிறை​வ​டைந்து விட்​ட​தால் வடக்கு,​​ கிழக்​கில் படை குறைப்பு நட​வ​டிக்​கையை மேற்​கொள்ள வேண்​டும் என்று தமி​ழர் தேசிய கூட்​டணி கோரி​யி​ருந்​தது.​

இ​தற்கு பதில் அளிக்​கும் வகை​யில் "சண்டே டைம்ஸ்' பத்​தி​ரி​கை​யில் கோத்​த​பய,​​ கூறி​யி​ருப்​பது:​

வ ​டக்கு,​​ கிழக்​கில் ராணு​வத்தை குறைக்க வேண்​டும் என்று கூறு​வது முட்​டாள்​த​ன​மா​னது.​ ராணு​வத்​தைக் குறைத்​தால் விடு​த​லைப் புலி​கள் போன்ற பயங்​க​ர​வாத அமைப்​பு​கள் மீண்​டும் தலை​தூக்க வாய்ப்​புள்​ளது.​

முன்பு வன்னி வனப்​ப​கு​தி​க​ளில் மறைந்து இருந்து கொரில்லா தாக்​கு​தல்​களை நடத்தி புலி​கள் ஆதிக்​கம் செலுத்தி வந்​த​னர்.​ இப்​போது அப்​ப​கு​தி​யில் மிக அதிக ராணு​வத்தை குவித்​துள்​ள​தன் மூலம் அவர்​களை தலை​தூக்க முடி​யா​மல் செய்​துள்​ளோம் என்​றார்.​

அதி​கா​ரப் பகிர்வு அவ​ச​ர​மில்லை:​​ தமி​ழர்​க​ளு​ட​னான அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு குறித்த கேள்​விக்கு,​​ "வடக்கு மற்​றும் கிழக்​கில் அர​சி​யல் சீர்​தி​ருத்​தங்​களை மேற்​கொள்​வது அவ​சி​யம் தான்.​ ஆனால் இப்​போ​தைய தேவை வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொள்​வ​தானே தவிர அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு இல்லை' என்​றார் கோத்​த​பய.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக