17 மே, 2010

நல்லிணக்கக் குழுவில் எண்மருக்கு நியமனம்



யுத்த சூழலின் போது, நேரடியாக அல்லது மறைமுகமாக, மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தொடர்பாக ஆராய்வதற்கென 08 பேர் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த சூழலின்போது, மனித உரிமை மீறல் சம்பவங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்ட நபர்கள், குழுவினர் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட எவரும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீத்தா ரஞ்சன் டி சில்வா, டாக்டர் அம்ரித் ரொகான் பெரேரா, பேராசிரியர் மொகமட் தாஹிர் மொகமட் ஜிப்ரி, பேராசிரியர் கருணாரட்ன ஹங்வத்த, சந்திரபால் சண்முகம், ஹேவா மாத்தர கமகே சிறிபால பளிஹக்கார, (திருமதி) மனோகரி ராமநாதன், மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஆகியோரே மேற்படிக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தையடுத்து இவர்களுக்கான நியமனம் ஜனாதிபதியூடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக