17 மே, 2010

இழப்புக்கான பதிவுத் திகதி கால எல்லை மேலும் நீடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளில் பாதிப்புக்குள்ளான வணிக, கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர், தமது இழப்புக்களுக்கான பதிவினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட வணிக-கைத்தொழில் வேளாலர் ஒன்றியத்தில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றிய செயலாளர் வே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் தமது இழப்புக்களைப் பதிவு செய்து பிரதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் முழுமை பெறாத மீள்குடியேற்றம் போன்ற காரணங்களையடுத்தே பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வணிக கைத்தொழில் வேளாண்மை சம்மேளனத்தின் வடக்கு கிழக்குக்கான ஆலோசகர் டபிள்யூ. ஜே, சூசைரெட்னம் விடுத்த பணிப்புரைக்கமைய இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக