2 நவம்பர், 2010

ஹொண்டாரஸ் நாட்டில் சிறிய ரக விமானம் திருட்டு!

ஹொண்டாரஸ் நாட்டின் ' லா மெஸா' சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று விடியற்காலை 3.00 மணியளவில் சிறியரக விமானமொன்று திருடப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய 5 பேரைக்கொண்ட குழுவொன்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட இவ்விமானமானது ஹொண்டாரஸ் அதிகாரிகளால் கடந்தவருடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகும்.

இதனை அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தேசித்திருந்தது.

விமானத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹொண்டாரஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒஸ்கார் அல்வாரெஸ், இது நன்கு திட்டமிடப்பட்டதும் கைதேர்ந்ததுமான ஒரு திருட்டுச் சம்பவம் என வர்ணித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக