2 நவம்பர், 2010

சிறைச்சாலை சீருடையில் மாற்றம் : அதிகாரிகள் எதிர்ப்பு

சிறைச்சாலை மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் புதிய தீர்மானத்திற்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் தொடக்கம் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவரதும் உடைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளமைக்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் உடை காக்கி நிறத்தில் அமையவில்லையெனினும் அங்குள்ள மக்களின் கல்வி நிலை உயர்ந்தளவில் உள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. தற்போதுள்ள இந்த உடைக்கே மக்கள் பயப்படுகின்றனர்.

அவ்வாறு உடைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமானால் அதற்கு பலமான எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக