2 நவம்பர், 2010

பட்டதாரிகள் நாட்டுக்குச் சுமையாக இருக்கக் கூடாது : எஸ்.பி.

இளம் தலைமுறையினரான பட்டதாரிகள் பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் சுமையாக இராமல் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது அவர்களது பொறுப்பாகும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

உயர் கல்வி அமைச்சில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் மேலும்,

"வெளிநாடுகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஹோட்டல்களில் சேவகர்களாகவும், சமையற்காரர்களாகவும், மற்றும் கூலித் தொழிலாளிகளாகவும் பணி புரிகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமல்ல.

இது குறித்துப் பெருமைப்பட வேண்டும். ஆனால் எமது நாட்டை நினைத்தால் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நம் நாட்டில் பட்டதாரிகள் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதில்லை.

ஆனால் இங்கிருந்து வெளிவாரிப் பட்டப் படிப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கு பாதை துப்புரவு செய்பவராகவும் பத்திரிகை விநியோகிப்பவர்களாகவும் இரவு பகல் பாராது வேலை செய்து பணம் சம்பாதித்து கொள்வர். இதே தொழிலை அவர்கள் இங்கு செய்ய வெட்கப்படுகின்றனர். " எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக