2 நவம்பர், 2010

பிரித்தானியாவில் தமிழர்களின் நடைபயணம் நேற்று ஆரம்பம் : பலர் பங்கேற்பு

பிரித்தானியாவில் 'வேர்க்சொப்' எனும் இடத்திலுள்ள படைவீரர்களை நினைவுகூரும் இடமான 'வோர் மெமோறியலு' க்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தமிழர்களின் நடைபயணம் ஆரம்பமானது.

இந்த நடைபயணத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மான் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அப்பிரதேச நகரசபை உறுப்பினர்கள் மூவர் உட்பட பல்லின மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபயணத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் இதில் கலந்துகொண்டதோடு 500 பவுண்ஸ் காசோலையையும் வழங்கி தமது ஆதரவை நல்கியிருந்தனர்.

நேற்றுக் காலை ஆரம்பமான நடைபயணத்தில் நிக்சன், லோகேஸ்வரன், சுதா ஆகியோர் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளனர். மாலை 3:30 மணிவரையான ஆறு மணித்தியாலங்களில் 18 மைல்கள் தூரத்தை இவர்கள் கடந்துள்ளனர்.

நாளை பேர்மிங்காமில் ஆரம்பமாகும் நடைபயணத்துடன் இணையும் இவர்களுடன் மேலும் சில தமிழர்கள் நடக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக