2 நவம்பர், 2010

உலகின் செழுமை மிகு நாடுகளில் 59வது இடத்தில் இலங்கை இந்தியா 88வது இடத்தில்

உலகில் செழுமை மிகுந்த நாடுகளின் 2010ம் வருட பட்டியலில் பெயரிடப் பட்டுள்ள 110 நாடுகளில் இலங்கை 59வது இடத்தில் உள்ளது.

2009ம் வருட பட்டியலில் இலங்கை 68 ஆவது இடத்தில் இருந்தது. இவ்வருட பட்டிய லில் 9 இடங்கள் முன்னேறி யுள்ளது. தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவை பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. சீனா பட்டியலில் 58 வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியா 88 வது இடத்திலும் நேபாளம் 91வது இடத்திலும் பங்களாதேஷ் 96 வது இடத்திலும் பாகிஸ்தான் 109 வது இடத்திலும் உள்ளன.

உலகில் 90 சதவீத சனத்தொகையை கொண்ட 110 நாடுகள் இந்த பட்டியலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம், தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆளுமை, கல்வி, சுகாதாரம், ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் சமூக மூலதனம் ஆகிய 8 உப பிரிவுகளில் நாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த பொருளாதார தரவரிசையில் இலங்கை 84 வது இடத்தில் உள்ளது. எனினும் உலக நாடுகளின் பொருளாதார தோற்றத்தின் சாதகமான அம்சங்களைக் கொண்டு நோக்கியதில் இலங்கை 10வது இடத்தில் உள்ளது.

அத்துடன் உலகளாவிய ரீதியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை இலங்கை 24 இடத்தில் உள்ளது.

ஆளுமை உப பிரிவில் இலங்கை 43 இடத்தில் உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கத்தில் அல்லது வர்த்தகத்தில் ஊழல் பெருமளவில் இடம்பெறவில்லை அன்று மக்கள் நம்புவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்படுகிறது. இந்த நோக்கத்தின் கீழ் உலகில் சிறந்த 25 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.

2009ம் வருட ஆய்வின்படி இலங்கை இராணுவத்தின் மீது 97 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அத்துடன் 87 சதவீதத்தினர் நீதித்துறையிலும் நம்பிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி இரு பிரிவுகளிலும் உலகில் முன்னணி 10 நாடுகளில் இலங்கையும் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக