6 நவம்பர், 2010

மட்டக்களப்பில் பயங்கர காற்று : கடல் கொந்தழிப்பு

கிழக்கு மாகாணத்தில் நேற்று முதல் கடுமையான கடல் கொந்தளிப்பான நிலை காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச்செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் என மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. இன்று பிற்பகல் காத்தான்குடி உட்பட பல கரையோர பகுதிகளில் கடல் அலைகள் வழமையான இடத்தை விட முன்னோக்கி வருவதையும் அவதானிக்க முடிந்தது.

கடலுக்குச் செல்ல வேண்டாமென மீனவர்களை வானிலை அவதான நிலையம் அறிவுறுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக