6 நவம்பர், 2010

மட்டு. உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்விநியோகம் மாகாண அமைச்சர் சுபைர் ஆரம்பித்து வைத்தார்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீள்குடியேறியுள்ள மட்டக்களப்பு - உறுகாமம் பிரதேசத்திற்கு மின்சார விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட் டுள்ளது.

கிழக்கின் உதயம் வேலைத் திட்ட த்திற்கு இணைவாக ஏனைய உட் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் மின்விநியோகத் திட்ட த்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். மாகாண அமைச்சு இதற் கான நிதியினை வழங்கியுள்ளது.

ஏறாவூர் பற்று செயலகப் பிரிவின் ஏ-5 வீதிக்கு சமீபமாகவுள்ள உறுகாமம் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற னர்.

விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கை மற்றும் நன்னீர் மீன்பிடி என்பன இம்மக்களின் வாழ் வாதாரத் தொழிலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக