6 நவம்பர், 2010

மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு: மூன்று பேர் ஸ்தலத்தில் பலி






மினுவாங்கொடை, மானம்மன பகுதி ஹோட்டல் ஒன்றில் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி ஒருவர் ஹோட்டல் முகாமையாளரையும் அவரின் இரு நண்பர்களையும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுடப்பட்ட மூவரும் ஸ்தலத்திலே இறந்துள்ளனர்.

கம்பஹாவைச் சேர்ந்த வீரசேகர சமீர (வயது 33), அகரவிட்டயைச் சேர்ந்த தமிந்த கிரியல்ல (வயது 39), கம்பஹா அஸ்கிரியவைச் சேர்ந்த ஆனந்த ஹெட்டியாரச்சி (வயது 41) ஆகியோரே இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. தனிப்பட்ட குரோதம் காரணமாக இவர்கள் கொல்லப்பட்டிருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சந்தேக நபர்களை தேடி இரு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக