6 நவம்பர், 2010

11 தமிழக மீனவர்கள் நவ.8இல் விடுவிப்பு: இலங்கை

ராமேஸ்வரம், நவ.5: தங்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீன்வர்கள் 11 பேரை நவ.8ஆம் தேதி திங்கள் கிழமையன்று விடுவிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 11 தமிழக மீன்வர்களை வரும் நவ.8 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கவிருப்பதாக இன்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது என்று மண்டபம் கடலோர காவல்படை அதிகாரி டி.எஸ்.சைனி தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த மீன்வர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், இலங்கையிலுள்ள நெடுந்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கடந்த நவ.3ஆம் தேதி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சிமடம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர், கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடல் எல்லையில் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக