6 நவம்பர், 2010

வானில் பறக்கும் இரு புராதன விமானங்கள்

இலங்கையின் மிகவும் புரதான இரு விமானங்கள் மக்கள் பார்வைக்காக இன்று வானில் பறக்கின்றன என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

விமானப்படை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிகவும் புராதன விமானங்களான 'டய்கர் மொத்' மற்றும் 1982ஆம் ஆண்டு ராஜகீய விமானப் படைக்குச் சொந்தமான 'சிப் மன்க்" ஆகியனவே ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பறக்கின்றன.

மக்களின் பார்வைக்காக 11.00 மணி வரை விமானங்கள் இரண்டும் பறக்கவுள்ளன.

'சிப் மன்க்' விமானம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு ராஜகீய விமானப் படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக