6 நவம்பர், 2010

தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்


லண்டன்: தண்ணீரில் மூழ்கினாலும், இடிபாடுகளில் சிக்கினாலும் பாதிக்காத மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, "ட்ரேட்ஸ்மேன்' நிறுவனம், தண்ணீருக்குள் இருந்து பேசினாலும் பாதிக்காத மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் மூழ்கிக்கொண்டே இந்த போனில் பேச முடியும்.
ஒரு வாகனத்தின் பின்புறம் கட்டப்பட்டு, 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மொபைல் போன் இழுத்து செல்லப்பட்டது. அதன் பின், இரண்டு டன் கான்கிரீட் குப்பைகள் இந்த மொபைல் போன் மீது கொட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைகளுக்கு பிறகும் இந்த மொபைல் போன் பாதிக்கப்படவில்லை. தண்ணீராலும், விபத்துகளாலும் பாதிக்கப் படாத இந்த போனுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இந்நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், "கடந்த இரண்டு நாட்களில், 50 ஆயி ரம் போன்கள் விற்று தீர்ந்து விட்டன. இந்த போனுக்காக ஏற்கனவே நான்காயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக