6 நவம்பர், 2010

சிறிய நீர்மின் உற்பத்தித் திட்டம்: 173 தனியார் நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்து


சிறிய நீர்மின் உற்பத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 173 தனியார் நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நீர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக பல தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அமைச்சர் இவர்களில் தமது அனுமதி பத்திரங்களை வியாபாரத்தை நோக்கமாகக் கருதித் தவறாகப் பயன்படுத்த முயற்சித்த 173 பேரின் அனுமதிகளே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேபோன்று தமக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை வியாபாரமாக்கி தவறாகப் பயன்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக