6 நவம்பர், 2010

பேராதனை பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் திங்களன்று மீளத்திறப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் மீளத் திறக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"காலவரையரையின்றி மூடப்பட்ட 4 பீடங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படும். கலை, விவசாயம், பொறியியல் மற்றும் விஞ்ஞான ஆகிய 4 பீடங்களும் உயர்கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய நாளை மறுநாள் திங்கட்கிழமை மீளத்திறக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக