4 அக்டோபர், 2010

தாதியர் சேவை யாப்பை நடைமுறைப்படுத்தல்: மருத்துவ அதிகாரிகள் எதிர்ப்பு நகைச்சுவை என்கிறது தாதியர் சங்கம்

தாதியர் சேவையின் யாப்பினை நடைமுறைப் படுத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பது நகைச்சுவையாக இருப்பதாக அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாதியர் சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவிகளின் உத்தியோகபூர்வ பெயர் மாற்றம் ஏற்படுவதால் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று கூறுவது வேடிக்கையான கூற்று என்று எண்ண வைக்கிறது என்று அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் தலைவர் முருதட்டுவே ஆனந்த தேரர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1980கள் வரை தாதியர் சேவையில் இருந்து உயர்ந்த பதவி பிரதான தாதி அதிகாரி என்று இருந்தது. 1980 களில் அது ‘தாதிப் பணிப்பாளர்கள்’ என மாறியது. இவ்வாறு பெயர் மாறியதால் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக கூறமுடியுமா.’

இந்நிலையில் ‘விசேட தர தாதி அதிகாரி’ எனும் பதவி ‘தாதி அதிகாரி’ என்று மாறியதால் வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறுவது தேநீர் கோப்பையில் முதலையைக் காண்பதைப் போல் உள்ளது என்று கூறுவது போல் இருக்கிறது.

இந்த பொறுப்பில்லாத எதிர்ப்பானது நாடளாவிய ரீதியில் உள்ள வைத்திய சாலைகளில் அனைத்து மருத்துவர்களினதும் எதிர்ப்பு அல்ல என்று அவ்வாறான மருத்துவர்களுடன் நட்பு ரீதியில் சேவையாற்றும் தாதியர் கூறுகின்றனர்.

பதவிப் பெயர் மாற்றப் பட்டதால் பொறுப்புகளில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற பொறுப்பான சங்கமொன்று சகோதர சேவையின் பிரச்சினையை மாறுபட்ட கோணத்தில் பார்க்குமாயின் அது நாட்டின் நோயாளர் சமூகத்துக்கு மோசமான நிலையை ஏற்படுத்துவதாகவே அமைகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக