4 அக்டோபர், 2010

காத்தான்குடியில் இம்முறை 300 பேர் புனித ஹஜ் பயணம்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை கிழக்கு மாகாணத்தின் பழம் பெரும் முஸ்லிம் பிரதேசமான காத்தான்குடியிலிருந்து சுமார் 300 பேர் புனித மக்கா பயணமாகவுள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு இம்மாதம் 16ஆம் திகதி காத்தான்குடியிலிருந்து பயணமாகின்றது. இக்குழு இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்தில் புனித மக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம், மற்றும் ஏனைய ஹஜ் முகவர் நிலையங்களுடாக மக்காவுக்குப் பயணிக்கும் ஹஜ்ஜாஜிகள் 20ஆம் திகதி முதல் பயணமாகவுள்ளனர்.

இம்முறை காத்தான்குடியில் அங்கீகரிக்கப்பட்ட 3 முகவர் நிலையங்களூடாகவும் கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுமுள்ள முகவர் நிலையங்களூடாகவும் இத்தொகையினர் புனித ஹஜ் கடமைக்காகச் செல்லவுள்ளமை குறிப்படத்தக்கது.

ஹஜ் கடமைக்காகப் புனித மக்கா செல்வோருக்கான பொது பிரியாவிடை வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் ஜாமியுழ் ழாபிரீன் பெரிய பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக