4 அக்டோபர், 2010

வடக்கில் 10 ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்கள் உடனடி ரத்து


வட மாகாணத்தில் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியலாளர்களுடன் ஆராயும் மீளாய்வுக் கூட்டம் அண்மையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சரிவரச் செய்யத் தவறிய மற்றும் வழங்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை செய்யத் தவறிய பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்த அனுமதிப் பத்திரமே இரத்துச்செய்யப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக