4 அக்டோபர், 2010

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச மகாநாடு




ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டு கிளைகளின் ஏற்பாட்டில் ஜேர்மனியில் இரண்டுநாள் மகாநாடு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தவருடம் அக்டோபர் மாதம் 30ம், 31ம் திகதிகளில் ஜேர்மனியில் உள்ள ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ள மகாநாட்டில் அமெரிக்கா, ஜரோப்பிய, நாடுகளின் அமைப்பாளர்களும், உயர்மட்ட உறுப்பினர்களும் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். மகாநாட்டில் விவாதிக்கபடவுள்ள பிரதான விடயங்கள்:

* யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மீள்குடியேற்றப்பட்ட மக்களிற்கான உடனடி உதவிதேவைகள்
* அரச பாதுகாப்பில் இருக்கும் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள்.
* மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல்
* தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான வேலை திட்டத்தை முன்னெடுத்தல்
* தமிழ் மக்களின் பிரதேசங்கள், கலாச்சாரம், தனித்துவம் என்பனவற்றினை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தினை ஏற்படுத்தும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை பெற்று கொள்வதற்கான போராட்டத்தினை ஜனநாயக வழியில் முன்னெடுத்தல்
* கட்சி தோழர்களின் புனர்வாழ்விற்கு உதவுதல்

என பல்வேறு செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, எதிர்கால திட்டங்களை புத்துணர்வுடன் முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களை கலந்து கொள்ளுமாறும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி - Democratic People's Liberation Front
மகாநாட்டின் ஊடக ஏற்பாட்டு குழு சார்பாக - எஸ்.ஜெகநாதன்(ஜேர்மனி)00 49-713130722

ஈமெயில்: ploteint@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக