4 அக்டோபர், 2010

மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை தெற்காசியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது: இந்தியா

மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை தெற்காசிய பிராந்திய வலய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றதென இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளை விடவும் இலங்கை முன்னணி வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

23ஆவது தொழிசார் பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக அபிவிருத்திக்கு இடையூறு ஏற்பட்ட போதிலும் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் துரித கதியில் அபிவிருத்தி இலக்குகளை எட்டக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்கீளா.

எதிர்வரும் காலங்களில் இந்த பயணக் கட்டுப்பாடும் தளர்த்தப்படுமட் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக