4 அக்டோபர், 2010

வடக்கில் 500 கிராமங்கள் அபிவிருத்தி; ரூ. 200 கோடியில் வேலைத் திட்டம்

வட மாகாணத்திலுள்ள 500 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கென 200 கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடு க்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கென 200 கோடி ரூபாவை உலக வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்கியுள்ளது என்றார்.

இத்திட்டத்திற்கென வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவுகள் மற்றும் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் அண்மையில் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர் இதற்கான அனுமதி அடுத்த வாரம் கிடைக்கப் பெறவுள்ளது என்றும் அந்த அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் இம்மாத இறுதியில் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 500 கிராமங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேற்படி 200 கோடி ரூபா நிதியைப் பயன்படுத்தி அந்தந்த கிராமங்களிலுள்ள காணிகள் சுத்திகரிக்கப்படவுள்ளதுடன், வீதிகள், குளங்கள், சமூக நிலையங்கள், மருந்தகம் மற்றும் நூலகம் போன்ற வைகள் அபிவிருத்தி செய்யப்படவுள் ளன.

அந்தந்த கிராமங்களின் வாழும் மக்களின் பூரண பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்திற்கு பல்வேறு அமைச்சுக்கள் அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க அதிபர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளனர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

‘நெல்சிப்’ வேலைத் திட்டத்தின் மூலம் ஐநூறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நன்மையடைய உள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு உந்து சக்தியாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்கென அரசாங்கம் பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக