4 அக்டோபர், 2010

பேக்கரி உரிமையாளர் இன்று தீர்மானம்






பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கம் இன்று தீர்மானிக்குமென சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன கூறினார்.

கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனமான பிரிமா, மா கிலோவொன்றுக்கான விலையை 8 ரூபா 33 சதத்தினால் அதிகரித்தி ருப்ப தையடுத்து பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை களையும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பேக்கரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மா இறக்குமதி செய்யும் செரண்டிப் நிறுவனமும் விரைவில் மா கிலோ வொன் றுக்கான விலையினை அதிகரிக்கு மென எதிர்பார்ப்பதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக