4 அக்டோபர், 2010

ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் : அமெரிக்கா

இலங்கை தொழில் சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சலுகைத் திட்டத்தை வென்றெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியன கூட்டாக இணைந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கான சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் தொழிற்சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என அமெரிக்க நிறுவனமொன்று முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முறைப்பாடுகள் குறித்து அமெரிக்காவில் அண்மையில் விசாரணைகள் நடைபெற்றன.

தொழில் அமைச்சருக்கு காணப்படும் அதீத அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென அமெரிக்க நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான சலுகைத் திட்டத்தை ரத்து செய்வது நோக்கமல்ல எனவும், தொழிற்சட்டங்களை நெறிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தொழிற்சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என அமெரிக்கத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக