18 அக்டோபர், 2010

மன்னார் வைத்தியசாலை வாகனம் வவுனியாவில் விபத்து

வவுனியா செட்டிக்குளம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் பயணித்த வாகனமே வவுனியா செட்டிகுளம் பொது வைத்தியசாலை நூழைவாயிலுக்கருகில் வைத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மன்னாரிலிருந்து பயணித்த வேளை,செட்டிகுளம் பகுதியில் வைத்து குறித்த 'கெப்' ரக வாகனம் விபத்திற்குள்ளானதென அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

வாகனம் அதிவேகமாகப் பயணித்தமையே விபத்து இடம்பெறக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்.டி.எச்.எஸ். எனப்படும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மன்னார் வைத்திய அதிகாரி காயங்கள் ஏதுமின்றி தப்பிக்க, சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக