18 அக்டோபர், 2010

நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஒழுக்கம், சட்டம் பேணப்படுவது அவசியம்


தென் மாகாண அபிவிருத்தி செயற்பாட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதிநாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில்ஒழுக்கம், சட்டம் பேணப்படுவது அவசியம்
தென் மாகாண அபிவிருத்தி செயற்பாட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி


அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது மக்கள் அதிக பலன் பெறும் வகையிலும் வீண் நிதி விரயங்களைத் தவிர்க்கும் வகையிலும் செயற்படுவது சகல அதிகாரிகளினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்ட விரோத நிர்மாணப் பணிகளைத் தடுப்பதில் கண்டிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, கூட்டுச் சட்டத்தை நிலைநாட்ட இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத் தினார். அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் உயர் மட்ட அதிகாரிகள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளுக்கருகில் சட்ட விரோத நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதாலேயே அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்பட்டு பெறுமதிவாய்ந்த மனித உயிர்களையும் இழக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெலிகமவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தென் மாகாண சபை அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, ராஜித சேனாரத்ன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும்போது ஒழுக்கமும், சட்டமும் முன்னிலைப்படுத்தப்படும் வகையில் சகலரும் செயற்பட வேண்டியது அவசியம். உயர் கல்வி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து நான் பெருமையடைகிறேன். இதன்போது பொலிஸார் பலர் காயங்களுக்குள்ளாகினர்.

எனினும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸாரின் அர்ப்பணிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். பொலிஸ் மா அதிபரினால் மட்டும் இதனை மேற்கொள்ள முடியாது. சகல துறையினரும் அத்துடன் பொது மக்களும் இந்நடவடிக்கைகளில் பூரண பங்களிப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது மக்கள் அதிக பலன் பெறும் வகையிலும் வீண் நிதி விரயங்களைத் தவிர்க்கும் வகையிலும் செயற்படுவது சகல அதிகாரிகளினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்ட விரோத நிர்மாணப் பணிகளைத் தடுப்பதில் கண்டிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, கூட்டுச் சட்டத்தை நிலைநாட்ட இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத் தினார். அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் உயர் மட்ட அதிகாரிகள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளுக்கருகில் சட்ட விரோத நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதாலேயே அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்பட்டு பெறுமதிவாய்ந்த மனித உயிர்களையும் இழக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெலிகமவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தென் மாகாண சபை அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, ராஜித சேனாரத்ன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும்போது ஒழுக்கமும், சட்டமும் முன்னிலைப்படுத்தப்படும் வகையில் சகலரும் செயற்பட வேண்டியது அவசியம். உயர் கல்வி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து நான் பெருமையடைகிறேன். இதன்போது பொலிஸார் பலர் காயங்களுக்குள்ளாகினர்.

எனினும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸாரின் அர்ப்பணிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். பொலிஸ் மா அதிபரினால் மட்டும் இதனை மேற்கொள்ள முடியாது. சகல துறையினரும் அத்துடன் பொது மக்களும் இந்நடவடிக்கைகளில் பூரண பங்களிப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக