18 அக்டோபர், 2010

கண்டியில் 9336 மில். ரூபா செலவில் குடிநீர்த் திட்டம் பிரதமரால் நேற்று அங்குரார்ப்பணம்


டென்மார்க் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்டியில் 9336 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் விநியோகத் திட்டத்தை பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கண்டி தெற்கு பிரதேச மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்குத் தீர்வாக மேற்படி நீர்வழங்கல் திட்டம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 3,83,500ற்கும் அதிகமான மக்கள் நன்மையடைய வுள்ளனர்.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு மேற்படி நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படு த்தியுள்ளதுடன் இதற்கென டென்மார்க் அரசாங்கம் 6577 மில்லியன் ரூபாவை நிதியுதவி யாக வழங்கியுள்ளது.

கண்டி தெற்கு யட்டிநுவர, உடுநுவர, கோறளே, யக்கரன்கொ ட்டுவ, கம்பளை நாவலப்பிட்டி ரண்மல்கடுவ, கம்பொல வெல உட்பட பத்துக்கு மேற்பட்ட பிரதேச மக்கள் இதன் மூலம் நன்மையடைய வுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக