18 அக்டோபர், 2010

இலங்கை அகதிகளுடன் வரும் 2ஆவது படகின்மீது கனடா கண்காணிப்பு

இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது படகை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் அவற்றைத் தடுக்கும் வகையில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாய்லாந்திலிருந்து கனடாவுக்குப் பயணிக்கவிருந்த 155 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக