18 அக்டோபர், 2010

மன்னார் வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் பாதசாரிகள் பாதிப்பு

மன்னாரின் பல வீதிகளில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் இதனால் விபத்துக்களும் இடம்பெற்று வருவதாகவும் பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

தனியார் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் அருகிலும் முன்பாகவும் நிறுத்தி வைக்கின்றனர்.

இதனால் பிறிதொரு வாகனத்தில் அவ்வழியால் பயணிப்பவர்களும் நடந்து செல்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகப் பாதசாரிகள் தெரிவிக்கினறனர்.

குறிப்பாக முர்வீதி, பெரியகடை, வைத்தியசாலை வீதி, எமிழ் நகர் - சாந்திபுரம் பிரதான வீதி ஆகியன, வாகன போக்குவரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் வாகனத் தறிப்பு இடமாக மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக