18 அக்டோபர், 2010

கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்க கால அவகாசம் நீடிப்பு



கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலக் கெடு இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் தமது வணக்கஸ்தலங்களூடாக அவற்றைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடியும்.

இதனை இறுதிச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காவிடின், சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக