18 அக்டோபர், 2010

வெற்றுக் காணிகள் உறவினருக்கு விநியோகம் : எள்ளுப்பிட்டி மக்கள்

மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெற்றுக்காணிகளை அங்கு மீள் குடியேறியுள்ள அரச அதிகாரி ஒருவர், அவருடைய உறவினர்களுக்கு எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முசலிப் பிரதேசச் செயலகத்தில் கணக்காளராகக் கடமையாற்றும் நபர் அங்கு மீள்குடியெறியுள்ள நிலையில், மக்கள் மீள்குடியேறாத காணிகளை சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் குறித்த நபரிடம் கேட்ட போது, தன்னிடம் இது தொடர்பாக யாரும் கேட்கக் கூடாது எனத் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, மாந்தை எள்ளுப்பிட்டிக் கிராம சேவகரிடம் கேட்ட போது, இது உண்மைதான் என்றும் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக