12 அக்டோபர், 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் விடுதலை


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் உட்பட ஐவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் இன்று விடுதலை செய்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாகவும், போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தி காத்தான்குடி பொலிஸார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், வேலையற்ற பட்டதாகீரிகள் சங்க தலைவர் ஆகியோர் மீது வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று காலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 5 எதிராளிகளையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக