12 அக்டோபர், 2010

சரத்தின் தண்டனை நியாயமானது : முன்னேஸ்வரத்தில் தேங்காய் உடைப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது எனத் தெரிவித்து இன்று காலை 11.30 மணியளவில் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் தேங்காய் உடைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுமார் 200 பேரளவில் கலந்து கொண்டனர். அவர்கள் களனி பிரதேசத்திலிருந்து பஸ்களில் வருகை தந்திருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் சரத் பொன்சேகாவுக்கான இராணுவ நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது எனக்கூறி முன்னேஸ்வரம் காளி கோவிலிலும், ஈஸ்வர கோவிலிலும் தேங்காய் உடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக