12 அக்டோபர், 2010

12.000 வீரர்கள் கொண்ட இராணுவம் உருவாக்கம் : அல்-கொய்தா அறிவிப்பு

யேமன் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் அல்-கொய்தா இயக்கமானது சுமார் 12,000 வீரர்களைக் கொண்ட இராணுவத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தென் யேமனில் இயங்கும் எடென்- எபியான் இஸ்லாமிய போராளி அமைப்பு போன்று இந்த இராணுவம் செயற்படுமென அதன் தலைமைக் கட்டளை அதிகாரி காசிம் அல்-ரயீமி தெரிவித்துள்ளார்.

மேற்படி படையானது இஸ்லாமையும், இஸ்லாமிய நாடுகளையும் சிலுவைப்போர் மற்றும் சமயத்துரோக முகவர்களிடமிருந்தும் பாதுகாக்கப் போராடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இதற்கான நிதி மற்றும் பொருள் உதவியை யேமனிய மக்களிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றோம். அவர்கள் இதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்" என காசிம் அல்-ரயீமி தனது 14 நிமிட உரை கொண்ட ஒலிநாடாவில் குறிப்பிட்டுள்ளார்.

அல்-கொய்தா இயக்கமானது யேமன் நாட்டில் நன்கு வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக