30 செப்டம்பர், 2010

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பெருந்தொகை பணம் வசூலிக்கும் கும்பல் கிழக்கில் விழிப்புடன் இருக்க வேண்டும்






கிழக்கில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகையான பணத்தை வசூலிக்கும் கும்பல் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் இச் சந்தர்ப்பத்தில் சிலர் குறிப்பிட்ட வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து வருகின்றனர்.

இவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்த சிலர் பிரதி அமைச்சரிடம் முறையிட்டும் உள்ளனர். அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போதும்

இவ்வாறானவர்கள் சிலர் இவரை அனுகி பணம் வசூலிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப் படும் சகல வெற்றிடங்களுக்கும் தகைமை அடிப்படையில் சகலரு க்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப் படும். எவரிடமும் பணத்தை கொடு த்து ஏமாந்துவிட வேண்டாம் என் றும் பிரதி அமைச்சர் முரளிதரன் கிழ க்கு மாகாண இளைஞர் யுவதி களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

வேலைவாய்ப்பை பெற்றுத் தருவ தாக எவரேனும் பணம் கேட் பார்களாயின் உடனடியாக தன்னு டன் தொடர்புகொள்ளுமாறும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அறிவி த்தல் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக