30 செப்டம்பர், 2010

19,20,21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும்: சிவாஜிலிங்கம்

18 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு பின்னர் 19,20, 21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும் என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

18 ஆவது அரசியல் சீர்திருத்திற்கு பின்னர் 19,20,21 அரசியல் சீர்திருத்தங்களை இனைவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை அரச தரப்பில் இருந்து எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சாக்லட் பெட்டியில் இரண்டு சாக்லட்டுகளை வைத்து சிறுவர்களை ஏமாற்றுவது போல் தமிழர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றப் பார்க்கின்றது.

வட, கிழக்கை இனைத்து தமிழ் மக்களை சந்தோசப் படுத்துவதாகவும் மறுபுறம் காணி,பொலிஸ், அதிகாரங்களை நீக்குவதாகவும் திட்டமிட்டுள்ளது. என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக