30 செப்டம்பர், 2010

ஹிங்குரக்கொட மகரகமயில் ஆயுதங்கள் மீட்பு



ஹிங்குரக்கொட மற்றும் மகரகம பகுதிகளில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹிங்குரக்கொட மாரசிங்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸார் லொறியொன்றை சோதனையிட்டுள்ளனர். அதிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் 30 ரவைகளும் மீட்கப்பட்டன. லொறியில் இருந்த நபர்களிடமிருந்து இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகரகம பராக்கிரம வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. சந்தேக நபரொருவரிடமிருந்து கிடைத்த தகவலின்படியே இந்தக் குண்டு பிடிபட்டதாக பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக