30 செப்டம்பர், 2010

தண்டனை ஒர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்: அனேமா பொன்சேகா

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அவரது பாரியார் அனேமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அனோமா, ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட 30 மாதகாலச் சிறைத்தண்டனையை தமது குடும்பம் ஏற்றுக்கொள்ளாது எனவும், நாட்டின் பொதுமக்களும், இராணுவத்தினரும் இந்தத் தீர்ப்பை நிராகரிக்க வேண்டுமென தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் தனிப்பட்ட எண்ணத்திற்கு அமைவாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத் தண்டனை தம்மை பலவீனப்படுத்தாது எனவும், இதன் மூலம் தாம் இன்னமும் வலிமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரை மீட்டெடுப்பதற்காக தைரியததுடன் போராட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக